‘பரதேசி’ : பாலா மற்றும் நாஞ்சில் நாடனின் மனிதத் தன்மை பற்றி ஒரு குறிப்பு

என்ன தேவைக்காக நாவலில் வருகிற மனிதாபிமானம் மிக்க ஒரு அற்புதமான மருத்துவக் கதாபாத்திரத்தை, ஒரு மதம் மாற்றும் கிறிஸ்தவக் கோமாளியாக மாற்றினீர்கள்? எல்லோராலும் கைவிடப்பட்ட அடிமைத் தோட்டத் தொழிலாளிகளின் இரத்தத்தை உறிஞ்சிக் குடிக்கும் ஒரு பலசரக்குக் கடைக்காரனை (நாவலில் காளிச் செட்டி) ஒரு முஸ்லிமாகவும் மாற்றிச் சித்திரித்திருப்பது எதற்காக? இவற்றின் மூலம் கலாபூர்வமாகவோ அல்லது அறவியல் அடிப்படையிலோ என்ன சாதித்துள்ளீர்கள்?

அப்சல் குருவின் தூக்குத் தண்டனை – ‘இந்து’ நாளிதழின் அணுகுமுறை

பெரும்பாலான செய்தி இதழ்கள் எல்லாம், ‘தண்டனை நிறைவேற்றப்பட்டது’ ‘இதோடு நிறுத்திக்கொள்ளலாம்’ ‘இதை விமர்சனமாக்காதீர்கள்’ ‘இதை அரசியலாக்காதீர்கள்’ என்று சிந்தனையை முடக்கிய வேளையில் ‘இந்து’ நாளிதழ், இது பற்றிய பலதரப்புக் கேள்விகளை முன்னிறுத்தி வெகுமக்களிடம் ஒரு அரசியல் விவாதத்தைத் தூண்டியிருப்பதை அறியமுடிகிறது.

குமுதம் ரிப்போர்ட்டரின் பழிதீர்க்கும் படலம்

மக்களுக்கு உண்மைச் செய்திகளை நடுநிலையோடு அளிக்க வேண்டிய ஊடகம் இப்படி நான்கு சுவர்களை எட்டிப்பார்த்து செய்தி வெளியிடுவதும் தனது பகையைத் தீர்த்துக் கொள்ள தனது ஊடக பலத்தைப் பயன்படுத்துவதும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. ‘குமுதம் ரிப்போர்ட்டர்’ இனிவரும் காலங்களிலாவது திருந்தவேண்டும்.

அப்சல்குரு தூக்குத் தண்டனை குறித்த வார இதழ்களின் பதிவு

மனித உரிமைக்காகக் குரல் கொடுக்கும் யாருமே, உயிர்ப்பலி வாங்கும் இப்படியான தீவிரவாதத் தாக்குதல்களை ஆதரிக்கவில்லை. உண்மைக் குற்றவாளிகளைக் காப்பாற்றுவதற்காக அப்சல் குரு போன்ற அப்பாவிகளைக் காவு கொடுப்பதைப் பற்றித்தான் இங்கு முதன்மையாக விமர்சிக்கிறார்கள். இந்த அம்சத்தைத் திட்டமிட்டு மறைக்கும் ‘புதிய தலைமுறை’ மனித உரிமை ஆர்வலர்கள் எல்லாம் ஏதோ தீவிரவாதத்தைக் கண்மூடித்தனமாக ஆதரிப்பதைப் போன்ற பிம்பத்தை ஏற்படுத்துகிறது.

அப்சல் குரு: இரண்டாவது முறை தூக்கிலிட்ட நாளிதழ்கள்

அப்சல் குருவின் குடும்பத்தினருக்குக் கூட அறிவிக்காமல் ரகசியமாகத் தூக்கிலேற்றியது, காஷ்மீரில் கைப்பேசி, இணையதள, செய்தித்தாள் சேவைகளை முடக்கியது, டில்லி பத்திரிக்கையாளர் இப்திகார் கிலானியை சட்டவிரோதமாக வீட்டுக்காவலில் வைத்தது உள்ளிட்ட மக்கள் விரோதச் செயல்களைக் குறைந்தபட்சம் ஓரிரு வரிகளில் கூடக் கண்டிக்காமல் அரசுத்தரப்பின் அறிக்கைகளை அப்படியே செய்திகளாக வெளியிட்டிருந்தன.