விடை தெரியாத கேள்விகள் அழகானவை, உரையாடலுக்கு வழிவகுப்பவை

இந்தக் கட்டுரை ‘விஸ்வரூபம்’ பிரச்னை உச்சத்தில் இருந்தபோது ஒரு வாரத்திற்கு முன் தோழர் கவின்மலர் கேட்டுக் கொண்டதற்கிணங்க எழுதினேன். இப்போது 'இந்தியா டுடே'யில் வெளிவந்துள்ளது. இக்கட்டுரையின் இறுதியில் நான் சொல்லியுள்ளது போலவும் எதிர்பார்த்தது போலவும் பிரச்னை முடிந்து நாளை படம் திரையிடப்பட இருப்பதாக அறிகிறோம். மகிழ்ச்சி.கமல்ஹாசன் ஒரு படம் எடுத்தார். தொடர்ச்சியாக இதுபோன்ற படங்களால் துயர்தரும் வாழ்வனுபவங்களைச் சந்தித்துக்கொண்டிருக்கும் ஒரு சிறுபான்மைச் சமூகம் இப்படமும் தங்களுக்கு எதிரானதாக இருப்பதைக் கண்டு அச்சம் தெரிவித்தது. அரசு தலையிட்டது. பேச்சுவார்த்தைகள் நடந்தன....

சிதம்பரம் கோவில் – உச்சநீதிமன்ற தீர்ப்பும் ஊடக அவதானிப்பும்

நமக்கு எழும் கேள்வி ரூ.304 கோடி வாடகை வசூலிக்கவேண்டிய அரசு நிர்வாகம் லஞ்ச சீர்கேட்டில் சிக்கி வெறும் ரூ. 36 கோடிதான் வசூலிக்கிறது என சுட்டிக்காட்டும் சு.சாமி, சிதம்பரம் கோவில் தீட்சிதர்கள் நிர்வாகத்தில் இருந்தபோது கோவிலின் ஆண்டு வருமானம் ரூ.37,000 என தாக்கல் செய்த நிலையில் அது அரசு நிர்வாகத்திற்கு சென்ற பிறகு ஒரு கோடியைத் தாண்டியது என்பதை ஏன் மறைக்க வேண்டும்?

விஸ்வரூபம், கருத்துச் சுதந்திரம், தனிமைப்படுத்தப்படும் முஸ்லிம்கள்

ஒரு நண்பர் ஒரு கதை அல்லது ஒரு கவிதை எழுதுகிறார். அது அவரது கருத்துச் சுதந்திரம். அது என்னைப் பாதிக்கிறது என நான் அதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பது எனது கருத்துச் சுதந்திரம். இதை நாம் ஏற்க வேண்டும். ஆனால் இன்று கருத்துச் சுதந்திரம் என்கிற பெயரில் முன்வைக்கப்படும் கருத்துகள் யாவும் அரசின் தடையை எதிர்ப்பதாக இருப்பதைக் காட்டிலும் முஸ்லிம்களின் எதிர்ப்பை விமர்சிப்பதாகவே இருப்பதைக் கவனிக்க வேண்டும். அந்த வகையில் முஸ்லிம்கள் இன்று தனிமைப் படுத்தப்பட்டுள்ள நிலை மிகவும் கவலை அளிக்கிறது.

ஷிண்டேவின் கருத்தும் ஊடகங்களின் இந்துத்துவச் சார்பும்

ஒரு நாட்டின் உள்துறை அமைச்சர் தனக்குக் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் கூறிய ஒரு எச்சரிக்கையை, ஏதோ அப்பழுக்கற்ற புனிதர்களின் மீது சுமத்தப்பட்ட அபாண்டப் பழி என்பதைப் போல இந்த ஊடகங்கள் ஆர்ப்பாட்டம் செய்வது ஏற்க இயலாதது.

செய்தி ஊடகம் இந்து மதத்தை இழிவுபடுத்துகிறதாம்!

மொத்தத்தில் நம் நாட்டின் காட்சி–செய்தி–பொழுதுபோக்கு ஊடகங்கள் அனைத்தும் பார்ப்பனமயமாக்கப்பட்டு இந்து மத வெறியின் பக்கவாத்தியங்களாகச் செயல்படுபவைதாம். இருப்பினும் பார்ப்பனியத்தின் சென்சார் கண்களில் சிக்காமல் அங்கொன்றும் இங்கொன்றுமாக எழும் ஒன்றிரண்டு கலகக்குரல்களையும் நெரிக்க வேண்டும் என்பதுதான் இந்து மதவெறி பாசிஸ்டுகளின் விருப்பம். இட்லரின் இந்திய வாரிசுகள் வேறு எப்படி இருப்பார்கள்?