குமுதம் ரிப்போர்ட்டரின் பழிதீர்க்கும் படலம்

மக்களுக்கு உண்மைச் செய்திகளை நடுநிலையோடு அளிக்க வேண்டிய ஊடகம் இப்படி நான்கு சுவர்களை எட்டிப்பார்த்து செய்தி வெளியிடுவதும் தனது பகையைத் தீர்த்துக் கொள்ள தனது ஊடக பலத்தைப் பயன்படுத்துவதும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. ‘குமுதம் ரிப்போர்ட்டர்’ இனிவரும் காலங்களிலாவது திருந்தவேண்டும்.

அப்சல்குரு தூக்குத் தண்டனை குறித்த வார இதழ்களின் பதிவு

மனித உரிமைக்காகக் குரல் கொடுக்கும் யாருமே, உயிர்ப்பலி வாங்கும் இப்படியான தீவிரவாதத் தாக்குதல்களை ஆதரிக்கவில்லை. உண்மைக் குற்றவாளிகளைக் காப்பாற்றுவதற்காக அப்சல் குரு போன்ற அப்பாவிகளைக் காவு கொடுப்பதைப் பற்றித்தான் இங்கு முதன்மையாக விமர்சிக்கிறார்கள். இந்த அம்சத்தைத் திட்டமிட்டு மறைக்கும் ‘புதிய தலைமுறை’ மனித உரிமை ஆர்வலர்கள் எல்லாம் ஏதோ தீவிரவாதத்தைக் கண்மூடித்தனமாக ஆதரிப்பதைப் போன்ற பிம்பத்தை ஏற்படுத்துகிறது.

அப்சல் குரு: இரண்டாவது முறை தூக்கிலிட்ட நாளிதழ்கள்

அப்சல் குருவின் குடும்பத்தினருக்குக் கூட அறிவிக்காமல் ரகசியமாகத் தூக்கிலேற்றியது, காஷ்மீரில் கைப்பேசி, இணையதள, செய்தித்தாள் சேவைகளை முடக்கியது, டில்லி பத்திரிக்கையாளர் இப்திகார் கிலானியை சட்டவிரோதமாக வீட்டுக்காவலில் வைத்தது உள்ளிட்ட மக்கள் விரோதச் செயல்களைக் குறைந்தபட்சம் ஓரிரு வரிகளில் கூடக் கண்டிக்காமல் அரசுத்தரப்பின் அறிக்கைகளை அப்படியே செய்திகளாக வெளியிட்டிருந்தன.

விடை தெரியாத கேள்விகள் அழகானவை, உரையாடலுக்கு வழிவகுப்பவை

இந்தக் கட்டுரை ‘விஸ்வரூபம்’ பிரச்னை உச்சத்தில் இருந்தபோது ஒரு வாரத்திற்கு முன் தோழர் கவின்மலர் கேட்டுக் கொண்டதற்கிணங்க எழுதினேன். இப்போது 'இந்தியா டுடே'யில் வெளிவந்துள்ளது. இக்கட்டுரையின் இறுதியில் நான் சொல்லியுள்ளது போலவும் எதிர்பார்த்தது போலவும் பிரச்னை முடிந்து நாளை படம் திரையிடப்பட இருப்பதாக அறிகிறோம். மகிழ்ச்சி.கமல்ஹாசன் ஒரு படம் எடுத்தார். தொடர்ச்சியாக இதுபோன்ற படங்களால் துயர்தரும் வாழ்வனுபவங்களைச் சந்தித்துக்கொண்டிருக்கும் ஒரு சிறுபான்மைச் சமூகம் இப்படமும் தங்களுக்கு எதிரானதாக இருப்பதைக் கண்டு அச்சம் தெரிவித்தது. அரசு தலையிட்டது. பேச்சுவார்த்தைகள் நடந்தன....

சிதம்பரம் கோவில் – உச்சநீதிமன்ற தீர்ப்பும் ஊடக அவதானிப்பும்

நமக்கு எழும் கேள்வி ரூ.304 கோடி வாடகை வசூலிக்கவேண்டிய அரசு நிர்வாகம் லஞ்ச சீர்கேட்டில் சிக்கி வெறும் ரூ. 36 கோடிதான் வசூலிக்கிறது என சுட்டிக்காட்டும் சு.சாமி, சிதம்பரம் கோவில் தீட்சிதர்கள் நிர்வாகத்தில் இருந்தபோது கோவிலின் ஆண்டு வருமானம் ரூ.37,000 என தாக்கல் செய்த நிலையில் அது அரசு நிர்வாகத்திற்கு சென்ற பிறகு ஒரு கோடியைத் தாண்டியது என்பதை ஏன் மறைக்க வேண்டும்?