வெறுப்புப் பிரச்சாரம் செய்ததற்காக Zee News சுதிர் சவுத்ரி மீது வழக்கு

Zee news ஆசிரியர் சுதிர் சவுத்ரி மீது ஜாமினில் வெளிவர முடியாத பிரிவில் வழக்குப் பதிவு செய்திருக்கிறது கேரள காவல் துறை.

சுதிர் சவுத்ரி கடந்த மார்ச் 11ம் தேதி Zee news தொலைக்காட்சியில் இஸ்லாம்-அச்சத்தை பரப்பும் வகையில் ஜிஹாதின் வகைகள் என விளக்கப் படத்துடன் செய்தித் தொகுப்பு ஒன்றை வெளியிட்டார். அதன் அடிப்படையில் புகார் எழுந்ததால், மத விரோதத்தைப் பரப்பியது, முஸ்லிம் சமூகத்தின் உணர்வுகளைக் காயப்படுத்தியது ஆகியவற்றின் அடிப்படையில் கேரளாவின் கோழிக்கோட்டிலுள்ள காவல் நிலையமொன்றில் அவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவாகியுள்ளது. ஜாமினில் வெளிவர முடியாத ஐபிசி 295 A பிரிவும் அவர் மிது போடப்பட்டிருக்கிறது.

காவல்துறைக்குப் புகாரளித்த அகில இந்திய இளைஞர் கூட்டமைப்பின் (AIYF) மாநிலத் துணைச் செயலாளரும் வழக்கறிஞருமான கவாஸ் கூறியதாவது, அந்த நிகழ்ச்சி மதச்சார்பற்ற விழுமியங்களுக்கும் அரசமைப்புக்கும் முரணாக இருப்பதாகத் தெரிவித்த அவர், ஒரு குறிப்பிட்ட மதப் பிரிவினருக்கு அது எதிராக இருப்பதாகத் தெரிவித்தார்.

கவாஸ் மார்ச் 17 புகார் அளிபதற்கு முன்னர் AIYF வின் தலைமையிடம் ஆலோசனை கேட்டுள்ளார். அதன் பிறகு அப்புகாரை கேரள மாநில டிஜிபி லோகநாத் பெஹெராவிடமும் அதன் நகலை கோழிக்கோடு காவல் ஆணையரிடமும் உள்துறை அமைச்சருக்கும் அனுப்பியதாகக் கூறினார்.

அவர் அளித்த புகாரில், இந்நாட்டிலுள்ள முஸ்லிம்களைக் குறிவைத்து ‘ஜிஹாத் விளக்கப்படம்’ போடுவதன் வழியாக வகுப்புவாத பதற்றத்தை ஏற்படுத்தியதோடு இரு பிரிவினரிடையே பிளவை ஏற்படுத்துவதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் (MIB) வழிகாட்டுதல் 2 (ii) என்பது வகுப்புவாத மனப்பான்மையை ஊக்குவிக்கும் அல்லது மதக்குழுக்களை இழிவுபடுத்தும் காட்சிகள் அல்லது சொற்களைப் பயன்படுத்துவதை தடுக்கிறது என்று கவாஸ் தனது புகாரில் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவர் FIR பதிவு செய்ததைத் தொடர்ந்து, ZEE நிர்வாகத்திடம் இருந்து, டெல்லி மற்றும் பெங்களூரில் உள்ள பத்திரிக்கையாளர்களிடம் இருந்து உட்பட தொடர் அழைப்புகள் வந்ததாகக் கூறியுள்ள அவர், புகார் அளித்ததன் பின்னணியில் உள்ள எனது நோக்கங்களையும் நான் ஏன் கேரளாவில் புகார் அளித்தேன் என்பதையும் கேட்டார்கள் என்றார். அதற்கு பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு தனக்கு இல்லாததால் தனது நிலைப்பாட்டை அவர்களுக்கு விளக்க தயாராக இல்லை என்றும் கவாஸ் தெரிவித்தார்.

AIYF தலைவர் கூறும்போது, புதிய தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின்படி ஒரு சேனலில் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டதும் அது பொதுவானது. ஒரு பார்வையாளர் அந்நிகழ்ச்சியுடன் முரண்பட்டால் அதற்கெதிராக அவர் எங்கு வேண்டுமானாலும் வழக்குப் பதிவு செய்யலாம். நான் கேரளாவில் வழக்கறிஞராக பணியாற்றுவதால் இங்கேயே புகார் தாக்கல் செய்துள்ளேன் என்று கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.