ஹத்ராஸ் பாலியல் வன்முறையுடன் தொடர்புபடுத்தப்படும் தவறான புகைப்படம் – உண்மையென்ன?
இளம் பெண் ஒருவர் கரும்புத் தோட்டத்தில் நிற்பது போன்ற அப்புகைப்படமானது பாதிக்கப்பட்ட பெண்ணின் படமில்லை எனத் தெரிய வந்துள்ளது. BOOM தளம் ஹத்ராஸ் பெண்ணின் சகோதரரிடம் அந்தப் புகைப்படத்தின் உண்மைத் தன்மை குறித்து விசாரித்தபோது, அது தனது தங்கையின் புகைப்படமில்லை எனவும் அப்படத்தில் உள்ளவரை தனக்குத் தெரியாது எனவும் கூறியுள்ளார்.
ஊடகத் துறையில் தடம் பதித்த பெண் ஆளுமைகள் (2) – ராணா அய்யூப்
தெஹல்காவில் இவர் பணியாற்றியதுதான் இவரது எழுத்துப் பயணத்தில் ஒரு மைல் கல்லாக அமைந்தது. அந்நிறுவனம் 2002ல் நடந்த குஜராத் கலவரத்தின் பின்னணியைக் கண்டரியும் பொறுப்பை இவரிடம் ஒப்படைத்தது. சுமார் 10 மாதங்கள் கள ஆய்வு செய்து அது தொடர்பான செய்திகளைச் சேகரித்தார். உயிரைப் பணயம் வைத்து இவர் வெளிக்கொணர்ந்த திடுக்கிடும் உண்மைகளையெல்லாம் தெஹல்கா வெளியிட மறுக்கவே, அவற்றை "Gujarat Files: Anatomy of a cover up" என்கிற பெயரில் புத்தகமாகத் தொகுத்து வெளியிட்டார் ராணா. 2002ம் ஆண்டு குஜராத்தில் நடந்த கலவரத்தை அரசியல்வாதிகளும் அரசு அதிகாரிகளும் எவ்வாறு மூடி மறைத்தனர் என்பதை இந்தப் புத்தகம் அம்பலப்படுத்தியது.
ஊடகத் துறையில் தடம் பதித்த பெண் ஆளுமைகள் (1) – கெளரி லங்கேஷ்
இந்துத்துவ கொள்கைகளுக்கு எதிராகவும், பெண்களின் உரிமைகளுக்காகவும், சாதியத்தை எதிர்த்தும் மிகத் துணிச்சலாக தன் எழுத்துகளின் மூலம் குரல் உயர்த்திய பெண் போராளி கௌரி லங்கேஷ். பல பத்திரிகையாளர்கள் அதிகார வர்க்கத்தின் நிழலில் அதற்குப் பணிவிடை செய்து வரும் சூழலில், அதிகாரத்திற்கு எதிராக சமரசமில்லாமல் சமர் செய்த ஆளுமை அவர்.
ஆன்லைன் மூலம் காவல்துறையில் புகார் கொடுப்பது எப்படி?
சமூக வலைதளங்களில் பிற மதத்தை அல்லது சாதியைப் பற்றி இழிவாகப் பேசுவதன் வழியாக மக்களிடையே குழப்பத்தையும், கலவரத்தையும் ஏற்படுத்த வேண்டும் எனும் குரூர நோக்கத்துடன் சில சமூக விரோதிச் சக்திகள் செயல்பட்டு வருகின்றன.
ஒருவர் சமூக ஊடகங்களில் மோசமாகக் கருத்துரைக்கும்போது அந்தத் தளத்திலேயே அது குறித்து ரிப்போர்ட் செய்வதும், பிறகு சட்ட ரீதியான நடவடிக்கையை எடுப்பதுமே சரியான வழிமுறை.
நசீர்: மற்றமையை மனிதாயப்படுத்துவதன் அழகியல்
எதிர்மறை அம்சம் தவிர்த்து ‘நசீர்’ முஸ்லிம் வாழ்க்கையின் மானுடத்தன்மையையும் அன்றாடத்தையும் படம் பிடித்திருப்பது, இஸ்லாமோ ஃபோபியாவை ஒரு கட்டமைப்பு ரீதியான யதார்த்தமாகக் காட்டியிருப்பது, இந்து முஸ்லிம் கலவரம் என்றெல்லாம் மையவாதம் பேசாமல் முஸ்லிம் விரோத இந்து வன்முறையைப் படம்பிடித்திருப்பது, இந்து வன்முறையை சில மத வெறியர்களின் செயல் என்று சுருக்காமல் சமூகத்தின் பல மட்டங்களிலும் நிலவும் தேசியவாத-முஸ்லிம் மற்றமையாக்கக் கதையாடல்கள் மற்றும் நிகழ்த்துதல்களின் விளைபொருளாகக் காட்டியிருப்பது போன்றவை எல்லாம் மிக முக்கியமான பங்களிப்புகள். அதற்காகவே நாம் இந்தப் படத்தைக் கொண்டாட வேண்டும்.